Monday, January 26, 2009

அம்மா

அம்மா !
நான் இவ்வுலகில் வந்தபோது
எனக்கு தெரிந்த சொந்தம் நீதான் !
இன்றும் என்னை புரிந்துக் கொண்ட
சொந்தம் நீ மட்டும் தான் !

சிறுவயதில்
என் பசிக்கு பால் ஊட்டினாய்
இப்போதோ
சோர்வுக்கு தைரியத்தை ஊட்டுகிறாய்

நான் தவறுகள் செய்து
ஞாபகம் இருக்கிறது
ஆனால் அதற்கு நீ அடித்தது
ஞாபகம் இல்லை

கல்லூரியில் நான் கற்ற
பாடங்களை விட
உன்னிடம் நான் கற்ற
வாழ்க்கை பாடங்கள் அதிகம்

எனக்கு நீ தான்
உயிர் கொடுத்தாய்
எனக்கு உன்னிடம் ஓர்
வரம் வேண்டும் !

வயதான காலத்தில் உனக்கு முன்
என் உயிர் பிரிந்து விட வேண்டும்
ஏனென்றால்
உன் பிரிவைத் தாங்கும் அளவிற்கு
என் உயிர்க்கு சக்தியில்லை !!!!


[என்னோட முதல் கவிதை,அதனால எப்படியிருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க]

Saturday, January 10, 2009

வந்துட்டேன்யா வந்துட்டேன்.....

ஹலோ ப்ளாக் மக்களே!!! ATTENTION PLEASE!!!!!!

கிறுக்கினவுடனே பயந்துடாதீங்க நான் தெளிவாதான் இருக்கேன்.
free யா இருக்கும்போது blog பக்கம் வாங்க, free யா இல்லாட்டியும் வாங்க.....

என்ன சிரிப்பு????
NOTE : limited followers only..first preferences for BOYS.....second preference for LADIES and third preference for CHILDREN

ok........வரட்டா.....